மும்பையைச் சேர்ந்த 37 வயதான பெண்ணின் வாட்ஸ்ஆப் உரையாடல் சமூக வலைத்தளமான எக்ஸில் வைரலாகி வருகிறது.
அந்த உரையாடலில் தனக்கான மணமகன் ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் கொண்டவராக இருக்க வேண்டும் என அவர் கேட்பதுதான் பயனர்களின் ஆரவாரத்துக்குk காரணம்.
அம்பர் என்கிற எக்ஸ் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் உரையாடலில், மும்பையைச் சேர்ந்த பெண், நிலையான வேலையோ வணிகமோ அதே நகரில் கொண்டுள்ள மணமகனைத் தேடுவதாக குறிப்பிடுகிறார்.
அந்த பெண் தனக்கான ஆண்டு வருவாய் ரூ. 4 லட்சம் எனத் தெரிவிக்கிறார். நல்ல கல்வி பின்புலம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணராகவோ பட்டய கணக்காளராகவோ இருந்தால் சரியென்றும் ஆண்டு வருவாய் குறைந்தது ரூ.1 கோடி இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இந்த பதிவு 6 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பல்வேறு வகையிலான கருத்துகள் இந்த பதிவில் பயனர்களால் முன்வைக்கப்படுகின்றன.