‘உள்நாட்டு உற்பத்தி போதிய அளவில் அதிகரித்துள்ளதால் அடுத்தாண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்று மத்திய ராசயன மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
இதுகுறித்து ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்திய வேளாண் துறைக்கு உரங்களின் தேவை அத்தியாவசியம். கடந்த 60-65 ஆண்டுகளாக ராசயன உரங்களை இந்திய விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
இதனிடையே, மாற்று உரங்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மண் வளத்துக்கும் பயிா்களின் ஆரோக்கியத்துக்கும் மாற்று உரங்களின் பயன்பாடு அவசியம்.
யூரியா உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்து வருகிறது. இந்தியாவின் வருடாந்திர உள்நாட்டு யூரியா தேவை 350 லட்சம் டன் ஆகும்.
உற்பத்தியில் இந்த இலக்கை அடைய 5 யூரியா தொழிற்சாலைகளை மத்திய பாஜக அரசு புதுப்பித்தது. இதனால் 2014-15-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 225 லட்சம் டன்னாக இருந்த உள்நாட்டு யூரியா உற்பத்தி தற்போது 310 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி 40 லட்சம் டன்னாக தற்போது உள்ளது. 5-ஆவது தொழிற்சாலையும் செயல்பட தொடங்கினால் இடைவெளி 20-25 சதவீதமாக குறையும். இந்த இடைவெளியை மாற்று உரங்களின் பயன்பாடு மூலம் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்றாா்.
தொடர்புடையது

சீா்காழி: 16.75 லட்சம் பறிமுதல்

நடப்பு நிதியாண்டின் யூரியா உற்பத்தி 275.75 லட்சம் டன்!

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் மத்திய அமைச்சா் பேச்சு: இன்று முடிவு தெரிவிப்பதாக தகவல்

இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

