திருடுபோன ஜெ.பி.நட்டா மனைவியின் கார் வாராணசியில் மீட்பு!

திருடுபோன ஜெ.பி.நட்டா மனைவியின் கார் வாராணசியில் மீட்பு!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மனைவியின் திருடுபோன கார் 20 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

தெற்கு தில்லி கோவிந்தபுரியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் நட்டா மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மார்ச் 19ஆம் தேதி சர்வீஸுக்காக விடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து காரை நட்டா மனைவியின் ஓட்டுநர் ஜோகிந்தர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த கார் திருடுபோனது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தெற்கு தில்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட கார் குருகிராம் நோக்கிச் சென்றதாகவும், ஹிமாச்சல் நம்பர் பிளேட் அதில் பொறுத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருடுபோன கார் 20 நாட்களுக்கு பிறகு உத்திரப் பிரதேச மாநிலம் வாராணசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக 2 பேரை தில்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், திருடிய காரை அவர்கள் நாகாலாந்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com