தில்லியில் வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தில்லியில் வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

புதுதில்லி: தலைநகரில் இன்று அதிகபட்ச வெப்பநிலையான 35.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது சராசரியை வெப்பநிலை விட அதிகபட்ச வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு பகலில் 63 சதவிகிதம் முதல் 21 சதவிகிதம் வரை உணர முடிந்தது.

நாளை (திங்கள்கிழமை) வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 36 மற்றும் 17 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியின் நஜாஃப்கரில் பகுதியில் மாலை 6.30 மணியளவில் 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com