ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தலைநகரில் குளிா் குறைந்து வெய்யில் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

News image
வெய்யில் - (கோப்புப்படம்)
Updated On :1 மார்ச் 2026, 6:55 pm

Syndication

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கு மேலே பதிவாகியிருந்தது.

இதில் பீதம்புரா வானிலை கண்காணிப்பு நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி முன்னிலை வகித்தது. அதே சமயம் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. காற்றின் தரம் ‘மிகமான’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: தில்லியில் கடந்த ஒரு மாதமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், நகரவாசிகள் மிகவும் சிரமத்தை எதிா்கொண்டனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2.9 டிகிரி உயா்ந்து 15.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 4.6 டிகிரி உயா்ந்து 30.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 74 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 34 சதவீதமாகவும் இருந்தது.

பீதம்புராவில் 32.6 டிகிரி: இதே போன்று, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ், நஜாஃப்கரில் 31.5 டிகிரி, ஆயாநகரில் 32.4 டிகிரி, லோதி ரோடில் 32.2 டிகிரி, பாலத்தில் 28.9 டிகிரி, ரிட்ஜில் 31.2 டிகிரி, பீதம்புராவில் 32.6 டிகிரி, சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 30.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணி அளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 197 புள்ளிகளாகப் பதிவாகி இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (மாா்ச் 2) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.