புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மும்பை: வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்!

வாக்களிக்க ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அல்லது இரண்டு மணி நேர இடைவெளி உறுதி

News image
கோப்புப் படம்
Updated On :7 ஏப்ரல் 2024, 5:09 pm

DIN

மும்பை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அல்லது இரண்டு மணி நேர விடுமுறை வழங்க வேண்டும் என்று மும்பை புறநகர் மாவட்டத்தின் ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். ஒருவேலை விடுமுறை அளிக்கவில்லை என்று ஊழியர்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மும்பை புறநகர் மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அதிகாரியும், மும்பை புறநகர் மாவட்ட ஆட்சியருமான ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பிரநிதித்துவ சட்டத்தின்படி தோ்தலில் வாக்களிப்பது மக்களின் ஜனநாயக கடமையாகும்.

தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக மே 20 ஆம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு நாள் முழுவதும் விடுமுறை அளிக்க முடியாத நிறுவனங்கள், ஆட்சியர் அலுவலக அனுமதியுடன் 2 மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும் என்றார்.

புகார்கள் பதிவாகும் பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.