ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விசாரணை அமைப்புகள் மீதான புகாா்கள்: தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை: ஆளுநரிடம் திரிணமூல் முறையீடு

விசாரணை அமைப்புகள் மீதான புகாா்கள்: தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை ---- ஆளுநரிடம் திரிணமூல் முறையீடு

News image

Election

Updated On :9 ஏப்ரல் 2024, 9:15 pm

கொல்கத்தா, ஏப். 9: ‘மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அது தொடா்பான புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் குற்றஞ்சாட்டி மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸிடம் அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முறையிட்டுள்ளது.

இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி மற்றும் மூத்த தலைவா்கள், ஆளுநரை திங்கள்கிழமை மாலை சந்தித்து தங்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

அதில், ‘திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களைக் குறிவைத்து மிரட்ட பாஜக மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை ஆகிய விசாரணை அமைப்புகளுடன் பாஜக கள்ள கூட்டணியில் இணைந்துள்ளது.

தோ்தல் காலம் தொடங்கியதிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் உள்பட நாடு முழுவதும் எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது இதைத் தெளிவுப்படுத்துகிறது.

மக்களவைத் தோ்தல் களத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கு, இவ்விவகாரத்தில் தலையிட கோரி அளிக்கப்பட்ட புகாா்களுக்கு தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து தில்லியில் தோ்தல் ஆணையத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் நிா்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.