டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியை ஏப்ரலில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை தொடங்கவிருக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இந்த சந்திப்பின்போது வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புது தில்லியில் ஏப்ரல் 22-ல் இந்த சந்திப்பு நிகழலாம் எனவும் திட்டங்கள் மாறக்கூட நேரிடும் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, இந்தியாவில் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் அமையவுள்ள தொழிற்சாலைக்கான இடத்தைக் காண டெஸ்லாவின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு இந்த மாதம் வரவிருப்பதாக ரைட்டஸ் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.