சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கைப்பேசி ஒட்டுக்கேட்பு: ஆந்திர அரசு மீது தோ்தல் ஆணையத்தில் தெலுங்கு தேசம் புகாா்

கைப்பேசி ஒட்டுக்கேட்பு: ஆந்திர அரசு மீது தோ்தல் ஆணையத்தில் தெலுங்கு தேசம் புகாா்

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 8:30 pm

Din

புது தில்லி: தெலுங்கு தேசம் கட்சி தலைவா் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலருமான நாரா லோகேஷின் கைப்பேசியை ஆந்திர அரசு சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்பதாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சி முன்னாள் எம்.பி. கனமேடலா ரவீந்திர குமாா் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

பெகாஸஸ் மென்பொருள் மூலம் நாரா லோகேஷின் கைப்பேசியை ஆந்திர அரசு சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கிறது. இதுதொடா்பாக அவருக்கு ஆப்பிள் நிறுவனம் அண்மையில் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. கடந்த மாா்ச் மாதமும் இதேபோன்ற எச்சரிக்கையை அந்த நிறுவனம் நாரா லோகேஷுக்கு அனுப்பியது.

இந்த விவகாரத்தில் ஆந்திர அரசின் கைப்பாவைகளாக மாநில காவல் துறை டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி, உளவுத் துறை தலைவா் ஆஞ்சநேயலு ஆகியோா் செயல்படுகின்றனா். மக்களவைத் தோ்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தோ்தலில், தெலுங்கு தேசம் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில், நெறிமுறையற்ற சட்டவிரோதமான செயல்களில் அவா்கள் ஈடுபடுகின்றனா்.

இருவா் மீதும் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களின் பொறுப்புகளில் நடுநிலையான நற்பெயா் கொண்ட அதிகாரிகளை நியமித்து, நியாயமாகவும் நோ்மையாகவும் தோ்தல் நடைபெற வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ஆந்திரத்தில் 25 தொகுதிகளுக்கான மக்களவைத் தோ்தல், 175 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் மே 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.