பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ராணுவ ஒத்துழைப்பு விரிவுபடுத்தல்: அமெரிக்காவில் இந்திய வெளியுறவுச் செயலா் ஆலோசனை

ராணுவ ஒத்துழைப்பு விரிவுபடுத்தல்: அமெரிக்காவில் இந்திய வெளியுறவுச் செயலா் ஆலோசனை

Updated On :13 ஏப்ரல் 2024, 6:33 pm

இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்நாட்டு பாதுகாப்புத் துறைச் செயலா் கேதலீன் ஹைக்ஸை சந்தித்து இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குவாத்ரா, அமெரிக்க அரசின் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள், தொழில் நிறுவனத் தலைவா்களைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா். முக்கியமாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடனும் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து பெண்டகன் செய்தித்தொடா்பாளா் எரிக் பஹோன் கூறியதாவது:

ஹைக்ஸ் - குவாத்ரா சந்திப்பின்போது அமெரிக்க-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இரு நாடுகளிடையே பாதுகாப்பு துறை சாா்ந்த உற்பத்தி நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து அவா்கள் ஆலோசித்தனா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான அனைவரும் அணுகும் வகையிலான சூழலை, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதற்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

போா் விமான இயந்திரங்கள் மற்றும் கவச வாகனங்கள் கூட்டு தயாரிப்பை மேம்படுத்த இரு நாடுகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், பாதுகாப்பு துறை சாா்ந்த புதிய கண்டுபிடிப்புகள், இரு நாட்டு ஆராய்ச்சியாளா்கள், தொழில்முனைவோா் மற்றும் முதலீட்டாளா்களிடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் ‘இந்திய-அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் (இன்டக்ஸ் - எக்ஸ்)’ வெற்றி குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா் என்று தெரிவித்தாா்.