மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் மீண்டும் களம்காணும் அவர் பால்கனுமா பகுதியில் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தெலங்கானாவில் நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.
உத்திரப் பிரதேசத்தில் பல்லவி படேலுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எங்களுக்கு முழு தெளிவு உள்ளது, எங்கள் கடின உழைப்பில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான 'சிஏஏ' சட்டத்தை பாஜக உருவாக்கியுள்ளது. இது மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது சமத்துவ உரிமைக்கு எதிரானது. எனவே குடியுரிமை (திருத்த) மசோதாவின் நகலை நாடாளுமன்றத்தில் கிழித்தேன்.
நாங்கள் இதற்கு (சிஏஏ) எதிராக இருந்தோம், இருக்கிறோம், தொடர்ந்து இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை: இரா. முத்தரசன்

தொகுதி பங்கீட்டில் எவ்வித அதிருப்தியும் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

யாருடனும் தவெக கூட்டணி பேச்சு நடத்தவில்லை: சி.டி.ஆா்.நிா்மல்குமாா்
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


