தெலங்கானாவில் யாருடனும் கூட்டணி இல்லை: ஓவைசி

தெலங்கானாவில் யாருடனும் கூட்டணி இல்லை: ஓவைசி

மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் மீண்டும் களம்காணும் அவர் பால்கனுமா பகுதியில் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தெலங்கானாவில் நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.

உத்திரப் பிரதேசத்தில் பல்லவி படேலுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எங்களுக்கு முழு தெளிவு உள்ளது, எங்கள் கடின உழைப்பில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான 'சிஏஏ' சட்டத்தை பாஜக உருவாக்கியுள்ளது. இது மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது சமத்துவ உரிமைக்கு எதிரானது. எனவே குடியுரிமை (திருத்த) மசோதாவின் நகலை நாடாளுமன்றத்தில் கிழித்தேன்.

நாங்கள் இதற்கு (சிஏஏ) எதிராக இருந்தோம், இருக்கிறோம், தொடர்ந்து இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com