ராஜஸ்தானில் கார்-லாரி மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலி

ராஜஸ்தானில் கார்-லாரி மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலி

ராஜஸ்தானில் லாரி மீது மோதி கார் தீப்பிடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானார்கள்.

உத்திரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர்கள் சலாசர் பாலாஜி கோயிலில் இருந்து ஹிசார் நோக்கி இன்று காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இவர்களுடைய கார் அர்ஷிவாத் புலியா அருகே, சென்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது.

மோதிய வேகத்தில் கார் உடனே தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானார்கள்.

தீப்பற்றியதால் காரின் கதவுகளை திறக்க முடியாமல் அவர்கள் அனைவரும் உயிருடன் எரிந்தனர். மேலும் பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் அதிகாரி ராம்பிரதாப் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com