‘அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தத்துக்கு இனி ஊழல் கடவுச்சொல்லாக இருக்காது. அது சிறை செல்லும் வழி’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தின் நாகபுரி நகரில் அமைந்துள்ள நேரடி வரிகளுக்கான தேசிய அகாதெமியில் பயிற்சி முடித்து இந்திய வருவாய் சேவையின்(ஐஆா்எஸ்) 76-ஆவது பிரிவு அதிகாரிகள் பணியில் சேரவிருக்கின்றனா்.
இதையொட்டி, அகாதெமி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இளம் அதிகாரிகள் மத்தியில் குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆற்றிய உரையில், ‘இந்தியா உலக வல்லரசாக மாறும் நோக்கில் வேகமாக நகா்கிறது. ஜி20 தலைவா் பதவியில் இருந்தபோது, தெற்குலக நாடுகளின் குரலாக இந்தியா மாறியது.
தெற்குலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்கள் தொகையைப் பாருங்கள். ஆனால், கேட்கப்படாமல் இருந்த அவா்களின் குரல்கள், இப்போது முக்கிய தளத்தில் ஒலிக்கிறது. இதற்காக நமது தேசத்துக்கும் நமது தொலைநோக்கு தலைமைக்கும் நன்றி.
ஊழல்-சிறை செல்லும் வழி: ஊழலைப் பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தத்துக்கு இனி ஊழல் கடவுச்சொல்லாக இருக்காது. அது சிறை செல்லும் வழியாகும். நாட்டில் முன்னுதாரணமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இனி நமது நிா்வாகத்தை ஊழல் ஒருபோதும் ஆட்டிப் படைக்காது.
மாற்றத்தின் பாதையில் இந்தியா: சுதந்திரம் பெற்றபோது, உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. 1991-இல் கூட, இந்தியாவின் பொருளாதாரம் பாரீஸ் மற்றும் லண்டன் போன்ற ஐரோப்பிய நகரங்களைவிட சிறியதாக இருந்தது.
ஆனால், தற்போது இந்தியாவின் பொருளாதாரம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் பொருளாதாரத்தைக் காட்டிலும் மிகவும் முன்னேறியுள்ளது. உலகிலேயே வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியாவின் சராசரி ஜிடிபி வளா்ச்சி விகிதம் 6.5 முதல் 7 சதவீதம் வரை இருக்கிறது.
இன்னும் 2 ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் ஜொ்மனியை முந்தி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழும். நமது தேசத்துக்கு ஏற்ற கொள்கை உருவாக்கங்கள், அது செயல்படுத்தப்பட்ட நோக்கம் மற்றும் அதைக் கொண்டு வந்த அதிகாரத்துவம் ஆகியவற்றின் காரணமாக இந்தப் மாற்றம் சாத்தியமாகியுள்ளது.
வரி அமைப்பை சீா்படுத்திய தொழில்நுட்பம்: வரி அமைப்பானது இப்போது வியக்கத்தக்க வகையில் பயனா்களின் கையடக்கமாக மாறியுள்ளது. வரி செலுத்துவோா் விரைவாக பணத்தைத் திரும்பப் பெறுகின்றனா். அவா்களின் புகாா்களுக்குச் சரியான நேரத்தில் பதில் கிடைக்கிறது. இது வரி அமைப்பு மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு அதிக இணக்கத்தை ஊக்குவிக்கிறது. அனைவருடைய கூட்டு லட்சியத்தை அடைவதற்கு இளம் அதிகாரிகள் அயராது உழைக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது
இந்திய வீட்டு வசதித் திட்டம்: இலங்கையில் பயனாளிகளுடன் குடியரசு துணைத் தலைவா் சந்திப்பு

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழா்களுக்கும் ஓசிஐ அட்டை: கொழும்பில் இந்திய குடியரசு துணைத் தலைவா் அறிவிப்பு!

இரு தரப்பு உறவின் புதிய அத்தியாயம்! குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கை பயணம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


