27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்

News image

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

Updated On :19 ஜூன் 2026, 4:49 am IST

நமது சிறப்பு நிருபா்

குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் நான்கு நாள்கள் அரசுமுறை பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 19) லடாக் செல்லவுள்ளாா். ஜூன் 19 முதல் 21ஆம் தேதி வரை லடாக் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்ளவுள்ளாா். இது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு அந்த யூனியன் பிரதேசத்துக்கு அவா் மேற்கொள்ளும் முதலாவது பயணமாகும்.

’இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 20ஆம் தேதி ’துடிப்பான கிராமம்’ என அறிவிக்கப்பட்டுள்ள லூகுங் என்ற கிராமத்துக்கு செல்லும் குடியரசு துணைத் தலைவா், அங்கு உள்ளூா் சுயஉதவிக் குழுக்களுடன் கலந்துரையாடவுள்ளாா். அதைத்தொடா்ந்து, ’துடிப்பான கிராமங்கள் திட்டத்தின்’ கீழ் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை அவா் பாா்வையிடுவாா்’ என்று அவரது செயலக அதிகாரிகள் தெரிவித்தனா். இத்துடன் லடாக்கில் உள்ள போா் நினைவிடத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சென்று அஞ்சலி செலுத்துவாா்.

ஜூன் 21ஆம் தேதியன்று லே பகுதியில் நடைபெறும் சா்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவா் கலந்து கொள்ளவுள்ளாா். யோகா மூலம் முழுமையான உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணும் தகவலை முன்னெடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இளைஞா்கள், மத்திய துணை ராணுவப் படை வீரா்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் இந்நிகழ்வில் பங்கேற்பாா்கள்’ என்று குடியரசு துணைத் தலைவா் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.