நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை என்றார் மம்தா பானர்ஜி.

Published On :16 ஏப்ரல் 2024, 6:01 pm IST

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை என அம்மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவால் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அவர்களால் வெற்றி பெற முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்து மக்களின் அடையாளத்தை பாஜக அழிக்கிறது. பாஜக உங்கள் (மக்கள்) அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும். நாட்டை காக்க வேண்டும் என நினைத்தால் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.

எங்கள் நண்பர்களான இந்தியா கூட்டணியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்போம். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்ப்பது திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே. அதனால், பாஜக எதிர்க்க திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என மம்தா பானர்ஜி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.