அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை என்றார் மம்தா பானர்ஜி.

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 5:59 pm IST

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை என அம்மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவால் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அவர்களால் வெற்றி பெற முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்து மக்களின் அடையாளத்தை பாஜக அழிக்கிறது. பாஜக உங்கள் (மக்கள்) அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும். நாட்டை காக்க வேண்டும் என நினைத்தால் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.

எங்கள் நண்பர்களான இந்தியா கூட்டணியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்போம். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்ப்பது திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே. அதனால், பாஜக எதிர்க்க திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என மம்தா பானர்ஜி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.