மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை என அம்மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவால் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அவர்களால் வெற்றி பெற முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்து மக்களின் அடையாளத்தை பாஜக அழிக்கிறது. பாஜக உங்கள் (மக்கள்) அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும். நாட்டை காக்க வேண்டும் என நினைத்தால் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.
எங்கள் நண்பர்களான இந்தியா கூட்டணியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்போம். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்ப்பது திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே. அதனால், பாஜக எதிர்க்க திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என மம்தா பானர்ஜி பேசினார்.