நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தேர்தல் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மமதா!

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவை எதிர்த்து, மமதா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது பற்றி...

News image

சுவேந்து அதிகாரி | மமதா பானர்ஜி - படம் - தினமணி

Updated On :16 ஜூன் 2026, 6:52 pm IST

மேற்கு வங்கத்தில் பவானிபூர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை எதிர்த்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்தது. 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் தனது 15 ஆண்டுகால ஆட்சியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இழந்தது.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. 

தேர்தலுக்கான பணிகள் தொடங்கிய நாள் முதலே மமதா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜியும் தற்போதைய முதல்வரான சுவேந்து அதிகாரியும் போட்டியிட்டனர். இதில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், பவானிபூர் தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி மனு தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கல்யாண் பானர்ஜி, இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி போன்ற பல்வேறு குற்றச் சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் மீது மமதா பானர்ஜி சுமத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Trinamool Congress leader Mamata Banerjee filed a petition in the Calcutta High Court on Tuesday (June 16) challenging the result of the Bhabanipur Assembly election in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.