மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்தின் புத்வார் பெத் பகுதியில் இரட்டை மாடிக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை தீ பிடித்தது.
தகவல் கிடைத்ததும் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டதாக புனே தீயணைப்பு துறை தெரிவித்தது.
யாரும் பலியானதாகவோ காயமுற்றதாகவோ இதுவரை தகவல் இல்லை.
எதனால் தீப்பற்றியது என்பது குறித்தும் தெரியவில்லை.