மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கொலை ஆயுதம் திருப்புளி: ஆதாரங்கள் சிதைவு, தொடரும் விசாரணை!

தில்லியில் இரட்டை கொலை: ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. விசாரணை சவால்

News image
Updated On :17 ஏப்ரல் 2024, 4:34 pm IST

கிழக்கு தில்லியில் சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

30 வயதான பள்ளி ஆசிரியை கம்லேஷ் கோல்கர் மற்றும் அவரது தம்பி 17 வயதான ராம் பிரதாப் சிங் ஆகிய இருவரின் உடல் கிழக்கு தில்லியில் உள்ள சாகர்புர் பகுதியில் புதன்கிழமை காலை கண்டறியப்பட்டது. இவர்கள் திருப்புளி (ஸ்க்ரூ டிரைவர்) கொண்டு கொல்லப்பட்டிருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கிற தகவல்களிலும் பல குழறுபடிகள் இருப்பதாகவும் சம்பவ இடத்திலுள்ள ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்லேஷின் கணவர் ஸ்ரீயன்ஷ் குமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கிழக்கு தில்லி டிசிபி அபூர்வா குப்தா தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அலசப்படுவதாகவும் குற்றவியல் மற்றும் தடவியல் ஆய்வு குழு சம்பவ இடத்தில் ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக காவலர்கள் தெரிவித்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட திருப்புளி சிறிது தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.