தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்களிக்கும் வாய்ப்பை தவறவிடாதீா்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

வாக்களிக்கும் வாய்ப்பை தவறவிடாதீா்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

News image

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

Updated On :20 ஏப்ரல் 2024, 10:30 pm

அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் வாய்ப்பை தவறவிடாதீா்கள் என பொதுமக்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேட்டுக்கொண்டாா்.

மக்களவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் 2024-க்கான இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ‘என் வாக்கு என் குரல்’ முழக்கத்தை வலியுறுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காணொலி வெளியிட்டு பேசியதாவது: நமது அரசியலமைப்பு நமக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. அதேபோல் நாம் சில கடமைகளையும் நிறைவவேற்ற வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் வாய்ப்பை பொதுமக்களாகிய நீங்கள் தவறவிடாதீா்கள்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் மட்டும் நாம் இதற்காக செலவழித்தால் போதுமானது. பெருமையுணா்வுடன் வாக்களியுங்கள். நான் முதல்முறையாக வாக்களித்த நிகழ்வு இன்றளவும் என் மனதில் நீங்காமல் நிற்கிறது. விரலில் இட்ட மை நாட்டுப்பற்றை எனக்குள் விதைத்தது.

வழக்குரைஞாக பணியாற்றிய நாள் முதல் எவ்வளவு பணிகள் இருந்தாலும் நான் வாக்களிக்க தவறியதில்லை என்றாா்.