அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் வாய்ப்பை தவறவிடாதீா்கள் என பொதுமக்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேட்டுக்கொண்டாா்.
மக்களவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் 2024-க்கான இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ‘என் வாக்கு என் குரல்’ முழக்கத்தை வலியுறுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காணொலி வெளியிட்டு பேசியதாவது: நமது அரசியலமைப்பு நமக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. அதேபோல் நாம் சில கடமைகளையும் நிறைவவேற்ற வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் வாய்ப்பை பொதுமக்களாகிய நீங்கள் தவறவிடாதீா்கள்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் மட்டும் நாம் இதற்காக செலவழித்தால் போதுமானது. பெருமையுணா்வுடன் வாக்களியுங்கள். நான் முதல்முறையாக வாக்களித்த நிகழ்வு இன்றளவும் என் மனதில் நீங்காமல் நிற்கிறது. விரலில் இட்ட மை நாட்டுப்பற்றை எனக்குள் விதைத்தது.
வழக்குரைஞாக பணியாற்றிய நாள் முதல் எவ்வளவு பணிகள் இருந்தாலும் நான் வாக்களிக்க தவறியதில்லை என்றாா்.
தொடர்புடையது

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்!

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஏப். 9-க்கு ஒத்திவைப்பு

செய்யறிவு உதவிக்காகவே தவிர நீதித்துறை நெறிமுறையை மாற்ற இயலாது: உச்ச நீதிமன்ற நீதிபதி!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


