அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

கேரள வாக்காளர்கள்: சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் உறுதியான பங்கேற்பு

News image
வாக்களிக்க காத்திருந்த மக்கள்- ANI
Updated On :26 ஏப்ரல் 2024, 12:24 pm

DIN

கேரளாவில் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றுவரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது மகக்ள் வாக்களித்துள்ளனர். அதிகாரபூர்வ தகவல்படி 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

2.77 கோடி வாக்காளர்கள் கொண்ட மாநிலம் கேரளா. இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கேரளத்தில் வெப்பநிலை 40 டிகிரியைத் தொட்டுள்ள நிலையில் தேர்தல் நாளான வெள்ளிக்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. இருந்தபோதும் மக்கள் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.

கேரளத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் 77.67 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இதனை விட அதிக சதவிகிதம் வெள்ளிக்கிழமை பதிவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று தரப்பு வேட்பாளர்களும் சுயேட்சைகளும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 19 தொகுதிகளிலும் இடதுசாரிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.