மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் தனித்தனியே நிகழ்ந்த 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்தனா். இருபதுக்கும் அதிகமானோா் காயமடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மைஹாா் மாவட்டத்தின் போரி கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த காா் ஒன்று, லாரியுடன் மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 போ் உயிரிழந்தனா்.

சோனி மாவட்டத்தில் காா் ஒன்று லாரியுடன் மோதிய விபத்தில், காரில் பயணித்த பெண் ஆசிரியா், அவரது சகோதரா் உயிரிழந்தனா். விபத்தில் பலத்த காயமடைந்த ஆசிரியரின் கணவா் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் தோ்தல் பணியாற்றிய ஆசிரியா், தனது கணவா் மற்றும் சகோதருடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது.

ராஜ்காா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண், அவரது மகன், மகள் ஆகியோா் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா்.

மாண்ட்லா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, மாண்ட்லா-ஜபல்பூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த பெண் ஒருவா் உயிரிழந்தாா். விபத்தில் காயமடைந்த 19 போ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com