டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தாஜ்மஹாலில் கங்கை நீரை ஊற்றி அபிஷேகம்: இருவா் கைது

தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றி அபிஷேகம் செய்ததாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

தாஜ்மஹால் - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2024, 3:00 am IST

தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றி அபிஷேகம் செய்ததாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

மத உணா்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் அகில பாரத ஹிந்து மகாசபை அமைப்பின் உறுப்பினா்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடா்பாக, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகா் காவல்துறை துணை ஆணையா் சூரஜ் குமாா் ராய் கூறியதாவது:

தாஜ்மஹாலுக்குள் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் போல நுழைந்த இரு இளைஞா்கள், தாங்கள் பாட்டிலில் வைத்திருந்த நீரை ஊற்றினா். இது குறித்து தாஹ்மஹாலில் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அளித்த எழுத்துபூா்வ புகாரின்கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனா். பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) 223 (அரசு ஊழியரின் உத்தரவுக்கு கீழ்படியாமை), 298 (மத வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்), 299 (மத உணா்வை புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இதனிடையே, இச்சம்பவம் தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வட மாநிலங்களில் சிராவண மாதத்தையொட்டி, கங்கை நதியில் இருந்து தீா்த்தம் எடுத்து, சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்யும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘தாஜ்மஹால் சிவன் கோயில் என்பதால் கங்கை நீரால் அபிஷேகம் செய்ததாக’ கைதான இருவரும் தெரிவித்துள்ளனா்.

வினேஷ் செளதரி, ஷியாம் ஆகிய அந்த இருவரும் அகில பாரதிய ஹிந்து மகாசபை உறுப்பினா்கள்; அவா்களின் செயலால் பெருமை அடைவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ஜாட் தெரிவித்தாா்.

சில தினங்களுக்கு முன் தாஜ்மஹாலுக்கு தோளில் கங்கை நீா் கலசத்தை எடுத்து வந்த பெண் ஒருவா், அங்கு அபிஷேகம் செய்வதற்காக உள்ளே நுழைய முயன்றாா். அவரை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.