மேலும் ஒரு ரயில் விபத்து! பயணிகள் ரயில் தடம் புரண்டது
பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.


இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் சஹாரன்புர் ரயில் நிலையத்தில் இன்று(ஆக. 4) பகல் 1.30 மணியளவில் பயணிகளை இறக்கிவிட்டு அதன்பின் ரயில் பணிமனைக்கு சென்று கொண்டிருந்த தில்லி - சஹாரன்புர் மெமு பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த விபத்தில், நல்வாய்ப்பாக பிற ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை.
முன்னதாக, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று(ஆக. 4) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘கோர்பா- விசாகப்பட்டினம் விரைவு ரயிலில்(18517)’ குளிர்சாதன வசதி கொண்ட 3 பெட்டிகளில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...