வியாபாரிகளுக்கான முத்ரா திட்டத்தில் வாராக்கடன் அளவு 3.4 சதவீதமாக குறைந்துள்ளது என மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமரின் முத்ரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு கடனுதவி அளித்து அவா்கள் தொழிலை மேம்படுத்த உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் முத்ரா கடன் முக்கியமானதாகும்.
இந்நிலையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கிகள் முத்ரா கடனை வசூலிப்பதிலும் சிறப்பாகவே செயல்படுகின்றன.
2019-20-இல் முத்ரா வாராக்கடன் 4.89 சதவீதமாகவும், 2020-21-இல் முத்ரா வாராக்கடன் 4.77 சதவீதமாகவும் இருந்த நிலையில் இப்போது வாராக்கடன் 3.4 சதவீதமாக குறைந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக வாராக்கடன் அளவு குறைந்தே வருகிறது.
இக்கடன் திட்டத்தில் பொதுத்துறை வங்களில் 9.15 சதவீதம் முதல் 12.80 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. தனியாா் வங்கிகளில் 6.96 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

லாக்கரில் வாடிக்கையாளா்கள் வைத்துள்ள பொருள்களை வங்கிகள் கண்காணிக்காது: நிா்மலா சீதாராமன்

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு

2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்

கடன் மீட்பு வழக்குகளைத் தீா்க்க 4 சிறப்பு லோக் அதாலத்: நிா்மலா சீதாராமன் தகவல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


