குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமே பாஜகவின் வேலை: அகிலேஷ்

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்ப்போம் என்று அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

AY

அகிலேஷ் யாதவ் எம்பி - (கோப்பு படம்)

Published On :5 ஆகஸ்ட் 2024, 1:20 pm IST

முஸ்லிம்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமே பாஜகவின் வேலை என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.

வக்ஃப் வாரிய சட்டம் 1995-இல் திருத்தங்களை கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த வாரத்தில் நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் பரவின.

இந்த திருத்தங்கள் மூலம் வக்ஃப் வாரியத்தின் சொத்துகளில் வாரியத்துக்கான உரிமையை குறைக்கும் விதிமுறைகள் கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருத்தங்கள் குறித்து சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

“ஹிந்து - முஸ்லிம் பிரச்னை அல்லது முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளை பறிப்பதை தவிர பாஜகவுக்கு வேறு வேலை இல்லை. சுதந்திரமாக செயல்படுவதற்காகவும், அவர்களின் மதத்தையும், அவர்களின் முறையையும் பின்பற்றுவதற்கான உரிமைகளை அவர்கள் பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த திருத்தங்களை நாங்கள் எதிர்ப்போம். இடஒதுக்கீடு பற்றி கவலைப்படுவோர், தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும், ” எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்கள், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பல செல்வந்தர்கள் தங்களின் சொத்துகளை கடவுளுக்கு தானமாக வழங்கினர். இந்த சொத்துகளை வக்ஃப் சொத்துகள் என்று கூறுகின்றனர்.

இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை முஸ்லிம்களுக்கான கல்வி மேம்பாடு, பள்ளி வாசல் பராமரிப்பு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.

இந்த சொத்துகளை நிர்வகிக்க வக்ஃப் வாரிய சட்டம் இயற்றப்பட்டு மாநில அரசுகளால் மாநில வக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வாரியங்களின் கீழ் தற்போது 9 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.