பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நிதி மோசடி வழக்கில் பத்மஸ்ரீ தொழிலதிபர் கைது!

கேரளத்தில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுந்தர் சி மேனனை கேரள திருச்சூர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

News image

சுந்தர் சி மேனன்

Updated On :7 ஆகஸ்ட் 2024, 4:56 am IST

திருச்சூர்: கேரளத்தில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுந்தர் சி மேனனை கேரள திருச்சூர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுந்தர் சி மேனன் (63). இவர் தான் நடத்தி வரும் இரு நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டியுடன் அசல் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தார். இதை நம்பி ஏராளமானோர் இவரது இரு நிறுவனங்களில் ரூ. 7.78 கோடிக்கு மேல் முதலீடு செய்திருந்தனர்.

எனினும் அவர், முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு முன்வைப்புத் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் 62 பேர் திருச்சூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் சுந்தர் சி மேனன் முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ. 7.78 கோடி பணம் பெற்றிருப்பதும், முதிர்வு காலம் முடிவடைந்தும் முதலீட்டாளர்களுக்கு தொகையைத் திருப்பி வழங்காமல் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சுந்தர் சி மேனன், அந்த நிறுவனங்களைச் சேர்ந்த பிற இயக்குநர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்று குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

தொழிலதிபர் சுந்தர் சி மேனனுக்கு 2016 இல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியிருந்தது. அத்துடன் இவர், புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தும் திருவம்பாடி தேவசம்போர்டு தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.