முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெடிபொருள் தயாரித்த சிறுவர்கள்! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

யூடியூப் பார்த்து வெடிபொருள் தயாரித்ததில் விபத்து

News image
Fire
Updated On :8 ஆகஸ்ட் 2024, 2:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் வெடிபொருள் தயாரித்த விபத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்தனர்.

பிகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், 5 சிறுவர்கள் வெடிபொருள் தயாரிப்பது குறித்த விடியோவைப் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களும் வெடிபொருள் தயாரிப்பதற்காக முயற்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில், தீக்குச்சிகளில் இருந்து மருந்தைப் பிரித்தெடுத்து, சிறு குவியலாகக் குவித்து, அதனில் ஒரு பேட்டரியையும் வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மருந்தின்மீது நெருப்பைப் பற்றவைத்துள்ளனர். நெருப்பைப் பற்றவைத்த நேரத்தில், தீப்பிழம்பு வெளிப்பட்டு, குவிக்கப்பட்ட மருந்து முழுவதும் வெடித்தது.

இதனையடுத்து, 5 சிறுவர்களின் முகம், உடல்களில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மூத்த காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் மேற்கொண்ட விசாரணையில், ஒரு மூத்த சிறுவரின் தலைமையில் 4 சிறுவர்கள் யூடியூபைப் பார்த்து வெடிபொருள் தயாரிக்க முற்பட்டபோதுதான், விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் 4 பேர் காயங்களுடனும், ஒருவர் மட்டும் பலத்த காயத்துடனும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறும் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.