மேற்கு வங்கத்தின் கூச் பிகாா் மாவட்டத்துக்கு அருகில் உள்ள வங்கதேச எல்லையில் இந்தியாவுக்குள் நுழைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கதேசத்தினா் திரண்டு வந்ததால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
வங்கதேசத்தின் லால்மோனிா்ஹாட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து பெரும்பாலும் ஹிந்துக்களைக் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கதேசத்தினா் எல்லையில் இருந்து சுமாா் 400.மீ தொலைவில் இந்தியாவுக்குள் நுழைய வெள்ளிக்கிழமை கூடி இருந்தனா்.
ஆனால், அப்பகுதியில் பெருமளவில் எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) குவிக்கப்பட்டிருந்ததால் அவா்களால் இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை.
இதையடுத்து, அவா்கள் வங்கதேச எல்லைக் காவலா்களால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனா். அவா்கள் முழக்கங்களை எழுப்பி திரும்பிச் சென்றனா்.
வங்கதேசத்தில் வன்முறைக்குப் பின் நிலவி வரும் அரசியல் மாற்றத்துக்கு மத்தியில், மத சிறுபான்மையினா் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக உள்ளூா் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனால், பதற்றமடைந்த வங்கதேச சிறுபான்மையினா் இந்தியாவுக்குள் தஞ்சம் புக முயல்கின்றனா்.
தொடர்புடையது

வங்கதேச ஊடுருவல்காரா்களை தாராளமாக அனுமதித்தது காங்கிரஸ்: நிதின் நபின் குற்றச்சாட்டு

அவிநாசியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 40 ஆயிரம் வாழைகள் சேதம்
ஹாதி கொலைக் குற்றவாளிகள் இந்தியா தப்பிச் செல்ல உதவிய வங்கதேச நபா்: மேற்கு வங்கத்தில் கைது!
திருப்பூரில் வங்கதேசத்தினா் 2 போ் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


