அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

குருகிராம் பணிமனையில் தீவிபத்து: 16 சொகுசு கார்கள் எரிந்து நாசம்!

குருகிராமில் உள்ள கார் பணிமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 சொகுசு கார்கள் எரிந்து நாசமாயின.

News image

தீ விபத்து ஏற்பட்ட குருகிராம் பணிமனை.

Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:16 pm IST

குருகிராமில் உள்ள கார் பணிமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 சொகுசு கார்கள் எரிந்து நாசமாயின.

ஹரியாணா மாநிலம், செக்டார் 41 பகுதியில் உள்ள கார் பணிமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர், வால்வோ, ஃபோர்டு உள்ளிட்ட 16 உயர் ரக கார்கள் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இவை அனைத்தும் தீவிபத்தில் எரிந்து சாம்பலாகிவிட்டன. மேலும் சில பழுதடைந்த வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நாசமடைந்த வாகனங்களின் விலை சுமார் ரூ.7 கோடி இருக்கும் என அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்தின்போது ஊழியர்கள் யாரும் பணிமனையில் இல்லாததால் உயிரிசேதம் தவிர்க்கப்பட்டது. "தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர், ஆனால் அவர்களால் கார்களை காப்பாற்ற முடியவில்லை," என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.