கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

குருகிராம் பணிமனையில் தீவிபத்து: 16 சொகுசு கார்கள் எரிந்து நாசம்!

குருகிராமில் உள்ள கார் பணிமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 சொகுசு கார்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து ஏற்பட்ட குருகிராம் பணிமனை.

Published On :

குருகிராமில் உள்ள கார் பணிமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 சொகுசு கார்கள் எரிந்து நாசமாயின.

ஹரியாணா மாநிலம், செக்டார் 41 பகுதியில் உள்ள கார் பணிமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர், வால்வோ, ஃபோர்டு உள்ளிட்ட 16 உயர் ரக கார்கள் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இவை அனைத்தும் தீவிபத்தில் எரிந்து சாம்பலாகிவிட்டன. மேலும் சில பழுதடைந்த வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நாசமடைந்த வாகனங்களின் விலை சுமார் ரூ.7 கோடி இருக்கும் என அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்தின்போது ஊழியர்கள் யாரும் பணிமனையில் இல்லாததால் உயிரிசேதம் தவிர்க்கப்பட்டது. "தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர், ஆனால் அவர்களால் கார்களை காப்பாற்ற முடியவில்லை," என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.