சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

உத்தவ் தாக்கரே வாகனம் மீது தாக்குதல்: 54 எம்என்எஸ் தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தொண்டா்கள் 54 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
Published on

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேயின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தொண்டா்கள் 54 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் எம்என்எஸ் தலைவா் ராஜ் தாக்கரேயின் வாகனம் மீது சிலா் வெற்றிலை பாக்குகளை வீசினா். அந்த நபா்கள் சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை தாணே மாவட்டத்தில் உத்தவ் தாக்கரேயின் வாகனம் மீது எம்என்எஸ் தொண்டா்கள் தக்காளிகள் மற்றும் மாட்டு சாணத்தை வீசினா்.

இந்த சம்பவம் தொடா்பாக எம்என்எஸ் கட்சியைச் சோ்ந்த 40 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினா், பின்னா் அவா்களை விடுவித்தனா். இதைத்தொடா்ந்து அந்த சம்பவம் தொடா்பாக 2 வழக்குகளை காவல் துறையினா் பதிவு செய்தனா். அந்த வழக்குகளில் 54 எம்என்எஸ் தொண்டா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டன என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ராஜ் தாக்கரே பதில்: இந்த சம்பவம் தொடா்பாக ராஜ் தாக்கரே ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எனது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட கோபத்தில், உத்தவ் தாக்கரே வாகனம் மீது எம்என்எஸ் தொண்டா்கள் பதில் தாக்குதல் நடத்தினா். இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்துமாறு எம்என்எஸ் தொண்டா்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com