ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் கனமழை: மஞ்சள் எச்சரிக்கை!

கனமழையையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
தில்லியில் கனமழை- Center-Center-Delhi
Updated On :12 ஆகஸ்ட் 2024, 9:30 am

பிடிஐ

தில்லியில் இன்று காலை பெய்த கனமழையையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முழுவதும் தலைநகர் தில்லியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் ஆகஸ்ட் 5 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இடையில் மழை சற்று ஓய்வெடுத்த நிலையில், நேற்று முதல் மீண்டும் கனமழை பொழிந்து வருகின்றது.

தில்லியின் நேற்று கனமழை பெய்ததையடுத்து, நகரத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை முதல் நல்ல மழைப் பதிவாகி வருவதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய தெற்கு, தென் மேற்கு மற்றும் கிழக்கு தில்லியில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இதனிடையே தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸாகவும், காலை 8:30 மணிக்கு ஈரப்பதம் 100 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, தேசியத் தலைநகரில் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 53 என்ற அளவில் மிதமான பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.