சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும்

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:21 pm

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 73.4 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் கடந்த வாரம் மழை ஏதும் பதிவாகவில்லை.

அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படும். மழைக்கு தற்போது வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 100.4 டிகிரியாகவும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. என்றளவில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.