ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேசியக் கொடியை அதிஷி ஏற்ற முடியாது: கூடுதல் தலைமைச் செயலர்

தில்லி அரசின் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக பொது நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.

News image
அமைச்சர் அதிஷி- Din
Updated On :13 ஆகஸ்ட் 2024, 6:09 am

DIN

தில்லி அரசின் சுதந்திர தின விழாவில், அமைச்சர் அதிஷி தேசியக் கொடியை ஏற்ற முடியாது என்று பொது நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று மாநில அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதல்வர்கள் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், தில்லி அரசு சார்பில் நடைபெறும் விழாவில் யார் கொடியேற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பொது நிர்வாகத் துறை அமைச்சர் கோபால் ராய், திங்கள்கிழமை கூடுதல் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், “முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை இன்று சந்தித்துப் பேசினேன், சுதந்திர தின விழாவில் அமைச்சர் அதிஷி, தேசியக் கொடியேற்றுவார் என்று அவர் தெரிவித்தார். சத்ரசல் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய கோருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் கடிதம்

அமைச்சரின் கடிதம்

இந்த நிலையில், அமைச்சரின் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், பொது நிர்வாகத் துறை கூடுதல் தலைமை செயலாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில்,

“விதிகளுக்கு முரணாக இருக்கும் வாய்வழி உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகாது, எனவே நடவடிக்கை எடுக்க இயலாது. சுதந்திர தின விழாவில் முதல்வரின் பங்கேற்பு குறித்து அவரது அலுவலகத்துக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், அவர் சிறையில் இருப்பதால் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, இப்பிரச்னை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறது.

இருப்பினும், சத்ரசல் மைதானத்தில் அனைத்து துறையினருடனும் இணைந்து சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை மறுநாள் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் யார் கொடியேற்றுவார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.