டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவ அதிகாரி பலி!

அமெரிக்க துப்பாக்கி, ரத்தத்தால் நனைந்த பைகள் கைப்பற்றப்பட்டது

News image
கோப்புப் படம்
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:43 am

DIN

வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைப் பிடிக்க முயன்றபோது ராணுவ அதிகாரி பலியானார்.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் அசார் வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக ராணுவப் படையின் ஒரு குழுவினர் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், ஆக. 13, செவ்வாய்க்கிழமை, இரவுநேரத்தில் ராணுவ வீரர்களுக்கும், 4 பேர் கொண்ட பயங்கரவாதக் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. பின்னர், இன்று காலை மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்தத் தாக்குதலின்போது, இராணுவ அதிகாரி கேப்டன் தீபக் சிங் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்தார்.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 ரகத் துப்பாக்கி, ரத்தத்தில் நனைந்த மூன்று பைகள், பிற உபகரணங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நாளை (ஆக. 15) சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ராணுவ வீரரின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.