மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லி: அதிவேக சொகுசு கார் மோதியதில் இளைஞர் பலி

தில்லியில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

News image
Screenshot grab from ANI
Updated On :18 ஆகஸ்ட் 2024, 12:18 pm

DIN

தில்லியில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

தெற்கு தில்லியில் உள்ள ஆசிரமம் அருகே அதிவேகமாக சென்ற சொகுசு கார் சனிக்கிழமை காலை சைக்கிள் பின்னால் மோதியது. இதில் பணிக்கு சென்றுகொண்டிருந்த ராஜேஷ்(34) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மோதிய வேகத்தில் அந்த இளைஞர் 7-8 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் அவரது சைக்கிளும் 100-150 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார் ஓட்டுநர் பிரதீப் கெளதம் என அடையாளம் காணப்பட்டார். பின்னர், அவர் மாலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவருடைய சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.