உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 நேபாள தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
கடந்த வியாழக்கிழமை இரவு உத்தரகண்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ரூா்கி பகுதி அருகே உள்ள 70 வீடுகளுக்குள் பத்ரி ராவ் ஆற்றில் இருந்து வெள்ள நீரும், சேறும் புகுந்தன. அந்த ஆற்று நீரால் விளைநிலங்களும் சேதமடைந்தன.
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பலத்த மழையை தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 1.20 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 நேபாள தொழிலாளா்கள் உயிரிழந்தனா். அவா்களின் சடலங்களை மாநில பேரிடா் மீட்புப் படை மீட்டது.
டெஹரி மாவட்டத்தில் உள்ள கெவ்லி கிராமத்தில் பலத்த மழையால் பல வீடுகள் சேதமடைந்தன.
ஹரித்வாா் மாவட்டத்தின் லக்சா் பகுதியில் கங்கை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ராகுல் என்ற நபா், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
புனிதத் தலங்கான கேதாா்நாத், பத்ரிநாத் மற்றும் யமுனோத்ரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
சத்தீஸ்கா்: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 13 போ் உயிரிழப்பு

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


