மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மதம் மாறி திருமணம்: மகள் ஆணவக் கொலை!

மதம் மாறி மகள் திருமணம் செய்ததால் தந்தையின் வெறிச்செயல்..

News image

ஆணவக் கொலை

Updated On :24 ஆகஸ்ட் 2024, 11:18 am

உத்தரப் பிரதேசத்தில் மதம் மாறி திருமணம் செய்ததால் மகளைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரூல்(30) இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லீம் நபரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தனியாக வாழ்ந்த வந்த னர் தம்பதியர்கள். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரக்ஷா பந்தன் அன்று தன் தந்தையின் வீட்டிற்கு பாரூல் வந்துள்ளார்.

மகளை கண்டதும் சுரேந்தர் கடும் கோபமடைந்தார். அப்போதும் மதம் மாறி திருமணம் செய்ததைச் சொல்லி பிரச்னை செய்துள்ளார். பேச்சு முற்றிய நிலையில் சுரேந்திர சிங் தாக்கூர் தனது மகளைக் கோடாரியால் அடித்துக் கொன்றுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாரூலின் தாய் கொடுத்த புகாரின்பேரில், சுரேந்திர சிங் மீது எப்ஃஐஆர் பதிவு செய்து தந்தை கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.