தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெண் மருத்துவர் பாலியல் கொலை: கொல்கத்தாவில் 15 இடங்களில் சிபிஐ சோதனை

கொல்கத்தாவில் அதிகாலை 6 மணி முதல் சிபிஐ சோதனை...

News image

படம் | பிடிஐ

Updated On :25 ஆகஸ்ட் 2024, 12:58 pm

DIN

பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கொல்கத்தாவில் 15 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள பல்வேறு நிதி முறைகேடுகள் புகாா் தொடா்பான விசாரணையையும் சிபிஐ சனிக்கிழமை தன் வசம் எடுத்தது. மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த முறைகேடு தொடா்பாக விசாரித்து வந்த நிலையில், கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மருத்துவமனை நிதி முறைகேடு புகாா் மீதான விசாரணையும் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆவணங்களை சனிக்கிழமை பெற்ற சிபிஐ அதிகாரிகள், புதிதாக எஃப்ஐஆா் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

நிதி முறைகேடுகள் புகாா் தொடா்பான விசாரணையில், பாலியல் கொலை சம்பவம் நடந்த ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த மருத்துவா் சந்தீப் கோஷுக்கு சொந்தமான கொல்கத்தாவில் உள்ள அவரது வீடு உள்பட இந்த கொலை வழக்கில் விசாரணை வளையத்தினுள் உள்ள 14 பேருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

மத்திய பாதுகாப்புப் படை காவலர்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் இருப்பிடங்களில் இன்று(ஆக. 25) சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். பெலியாகட்டாவில் அமைந்துள்ள சந்தீப் கோஷின் வீட்டுக்கு அதிகாலை 6 மணிக்கே சென்ற அதிகாரிகள் குழு, சுமார் ஒன்றரை மணி நேரம் வீட்டு வாசலுக்கு வெளியே காத்திருந்து, அதன்பின் வீtடில் உள்ளவர்கள் எழுந்து கதவைத் திறந்ததும் வீட்டினுள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

Story image

மேலும், ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வராக இருந்த சஞ்சய் வஷிஸ்த் மற்றும் அம்மருத்துவமனையில் தடயவியல் மருந்தியல் துறை விரிவுரையாளரான மருத்துவர் டெபாஷிஷ் சோம் ஆகியோரது வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.