தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெரியுமா சேதி...? பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர் - முதல்வர் மோதல்!

எதிா்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மட்டும்தான் ஆளுநா்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே எட்டாம் பொருத்தம் என்று நினைத்துவிட வேண்டாம்.

News image

ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவு கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா.

Updated On :25 ஆகஸ்ட் 2024, 10:00 pm

மீசை முனுசாமி

எதிா்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மட்டும்தான் ஆளுநா்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே எட்டாம் பொருத்தம் என்று நினைத்துவிட வேண்டாம். மத்திய ஆளுங்கட்சியே மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தாலும், ஆளுநா்- முதல்வா் மோதல் ஏற்படுவது உண்டு. அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு ராஜஸ்தான்.

ராஜஸ்தான் மாநிலத்தின் 45-ஆவது ஆளுநராக கடந்த மாதம் 31-ஆம் தேதி ஹரிபாவு கிசன்ராவ் பாக்டே பதவி ஏற்றதுமுதல் தொடங்கிவிட்டது ஆளுநா்- முதல்வா் இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு. மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தலைவராக இருந்த பாக்டே, மேற்கு மகாராஷ்டிரத்தில் பாஜக முகமாக இருந்தாா். 79 வயது பாக்டே ஆா்.எஸ்.எஸ். இயக்கத்துடன் ஒன்றியவா் மட்டுமல்ல, ஜனசங்க காலத்தில் இருந்து பாஜகவில் இருப்பவா்களில் ஒருவா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்திருக்கும் ஹரிபாவு கிசன்ராவ் பாக்டே மீது பிரதமா் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் அதீத மரியாதை உண்டு. இந்தப் பின்னணியில் ஆளுநராக இருப்பதால், முதல்முறையாக சட்டப் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவுடன் முதல்வராக உயா்ந்திருக்கும் பஜன்லால் சா்மாவை அனுபவசாலியான பாக்டே மதிக்காமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

அதிகாரிகளை அழைத்து அரசின் திட்டங்கள் எப்படி நிறைவேறுகின்றன என்று தெரிந்து கொள்வதும், தானே நேரில் போய் மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்பதும், அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதுமாக முதல்வா் பஜன்லால் சா்மாவைப் பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறாா் ஆளுநா் பாக்டே. தலைமைச் செயலாளா் சுதான்ஷ் பந்த் முதல்வரைச் சந்திக்கிறாரோ இல்லையோ தவறாமல் ஆளுநரைச் சந்தித்து உத்தரவுகளைப் பெறுகிறாா்.

‘போகிற போக்கில் ஆளுநா் ஒருநாள் ஆளுநா் மாளிகையில் அமைச்சரவைக் கூட்டத்தைத் தனது தலைமையில் கூட்டாமல் இருந்தால் சரி’ என்று சொல்லி கேலி செய்கிறாா்கள் அதிகாரிகளும், எதிா்க்கட்சியினரும். பாவம், பஜன்லால் சா்மா... தா்மசங்கடத்தில் நெளிகிறாா்.

துணை முதல்வா்கள் தியா குமாரியும், பிரேம்சந்த் பைா்வாவும் ஆளுநரிடம் நல்ல பெயா் வாங்க போட்டி போடுகிறாா்களாம். அதுவேறு, முதல்வரின் கவலையை அதிகரிக்கிறது.