ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹைதராபாத்: இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுகொண்டிருந்த பெண் காவலர் கொலை

ஹைதராபாத்தில் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுகொண்டிருந்த பெண் காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :2 டிசம்பர் 2024, 6:48 am

DIN

ஹைதராபாத்தில் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுகொண்டிருந்த பெண் காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹயத்நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரின் இரு சக்கர வாகனத்தை மறித்து தாக்கிய மர்ம நபர், பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பெண் காவலர் பலியானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் காவலர் அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்டிருந்த நிலையில், அவரது சகோதரரே அவரைக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இப்ராஹிம்பட்டினம் காவல் நிலைய காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.