ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 9:34 pm

வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம் வெங்கலா கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மனைவி சுந்தரி (58). இவா் போடி தென்றல் நகரைச் சோ்ந்த துரைராஜ் மகன் திருப்பதியுடன் சின்னமனூரிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வீரபாண்டி புறவழிச் சாலையில் சென்றபோது சுந்தரியின் சேலை இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுந்தரி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.