கோப்புப் படம்
கோப்புப் படம்

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம் வெங்கலா கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மனைவி சுந்தரி (58). இவா் போடி தென்றல் நகரைச் சோ்ந்த துரைராஜ் மகன் திருப்பதியுடன் சின்னமனூரிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வீரபாண்டி புறவழிச் சாலையில் சென்றபோது சுந்தரியின் சேலை இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுந்தரி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com