தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

டிஜிட்டல் மோசடி: 59,000 வாட்ஸ்ஆப் கணக்குகள், 6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!

டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரிப்பு! 6.69 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 6:03 pm IST

டிஜிட்டல் கைது மோசடி குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதாக 59,000-க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப் கணக்குகள் மட்டுமல்லாது, பிரபல சமூக வலைதளமான ஸ்கைப்பில் 1,700-க்கும் மேற்பட்ட கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ‘இந்தியன் இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம்(ஐ4சி), மோசடி குற்றச் செயல்களில் ஈடுப்பட்ட 59,000-க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப், 1,700-க்கும் மேற்பட்ட ஸ்கைப் கணக்குகளைக் கண்டறிந்து, அவற்றை முடக்கியுள்ளது.

Story image

ஐ4சி-யால் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘குடிமக்கள் நிதி இணையவழி மோசடிப் புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு’, பணமோசடிகளைக் குறித்து பாதிக்கப்பட்டோர் உடனடியாக புகாரளிக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் மோசடிக்குள்ளான வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் பறிக்கப்படும்முன் அதை தடுக்க இயலும்.

அந்த வகையில், இதுவரை, 9.94 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையவழி மோசடிப் புகார்களில் துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதன் மூலம், ரூ. 3,431 கோடிக்கும் அதிக தொகை பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நிகழாண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 6.69 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளும் 1.32 லட்சம் ஐஎம்இஐ-முகவரிகளும் முடக்கப்பட்டுள்ளன

டிஜிட்டல் மோசடி உள்ளிட்ட பல்வேறு இணையவழி குற்றங்களை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பலப்படுத்த, மத்திய அரசும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் ஓர் அமைப்பை வடிவமைத்துள்ளன. இதன்மூலம், இந்தியாவிலுள்ள கைப்பேசி எண்கள் போல் திரையில் காண்பிக்கப்பட்டு உலகின் ஏதோவொரு மூலையிருந்து வரும் சர்வதேச மோசடி அழைப்புகளைக் கண்டறிந்து அவற்றை தடுக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.