மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மராத்வாடா சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்..!

புதிய அரசு போராட்டங்களைச் சந்திக்க நேரிடும்..

News image
Updated On :5 டிசம்பர் 2024, 5:12 pm IST

மகாராஷ்டிரத்தில் அமையவுள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் அரசு மராத்வாடா சமூக மக்களின் கோரிக்கைகளை எந்தவித வெறுப்பும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் சிவசேனா(யுபிடி) மூத்த தலைவர் அமபாதாஸ் தன்வே தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமான நிலையில், முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இதையடுத்து தற்போது பொறுப்பு முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று அறிவிக்கப்பட்டதில், குழப்பம் தீர்ந்தது. பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவீஸ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று மாலை பதவியேற்றுக் கொள்கிறார்.

இதுதொடர்பாக சிவசேனா(யுபிடி) மூத்த தலைவர் அமபாதாஸ் தன்வே பகிர்ந்த எக்ஸ் பதிவில்,

முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஃபட்னாவீஸுக்கு வாழ்த்துக்கள். மராத்வாடா சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஜெயக்வாடி அணையைப் புதுப்பித்து, நீர்யிழப்பை தடுக்க வேண்டும். நீர்ப்பாசனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். சத்ரபதி சம்பாஜிநகரில் இருந்து புணே மற்றும் ஜல்னா முதல் நாந்தேட் வரை விரைவுச்சாலைகள் அமைக்க வேண்டும். .

சத்ரபதி சம்பாஜிநகருக்கான குடிநீர் குழாய் திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கப்படாவிட்டால், புதிய அரசு போராட்டங்களைச் சந்திக்க நேரிடும், சத்ரபதி சாம்பாஜியாநகரில் இருந்து விமான இணைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.