‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

ஃபட்னவீஸின் வெற்றிக்கான ரகசியம் என்ன..? மனைவி கூறியவை!

ஃபட்னவீஸின் வெற்றிக்கான ரகசியம் குறித்து ஃபட்னவீஸின் மனைவி பகிர்ந்தவை...

News image

மனைவி அம்ருதாவுடன் தேவேந்திர ஃபட்னவீஸ்

Updated On :5 டிசம்பர் 2024, 9:31 pm IST

மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸின் வெற்றி குறித்து அவரது மனைவி அம்ருதா ஃபட்னவீஸ் பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்ட நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இன்று(டிச. 5) பதவியேற்றுக் கொண்டது.

மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து அம்ருதா ஃபட்னவீஸ் கூறும்போது, “தேவேந்திர ஃபட்னாவீஸின் அரசியல் வெற்றிக்கு பொறுமை மற்றும் விடாமுயற்சியின் முக்கிய குணங்களாக உள்ளன. தேவேந்திர ஃபட்னவீஸ் 6-வது முறையாக எம்எல்ஏவாகவும், 3-வது முறையாக முதல்வராகவும் பதவியேற்றதில் மிகவும் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

2014-2019 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பணியாற்றிய ஃபட்னவீஸ், 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ‘நான் மீண்டும் வருவேன்’ என்று முழக்கமிட்டார்.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் 105 இடங்களில் வெற்றிபெற்றாலும், சிவசேனையுடனான பாஜகவின் கூட்டணி முறிந்ததால், அவர் மீண்டும் முதல்வராக முடியவில்லை. ஆனால், அந்த நேரத்தில் அஜீத் பவாருடன் துணை முதல்வராக 80 மணிநேரம் மட்டுமே இருந்தார்.

ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை ஏற்றதால், 2022-லும் ஃபட்னவீஸால் முதல்வராக முடியவில்லை. தற்போது பேரவைத் தேர்தலில் மகாயுதி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதால், ஃபட்னவீஸ் மீண்டும் 3-வது முறையாக முதல்வராகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.