அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ்-சோரஸ் தொடா்பு குற்றச்சாட்டு: எதிா்க்கட்சிகள் அமளியால் முடங்கியது மக்களவை

மக்களவையில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை அலுவல்கள் முடங்கின.

News image
Updated On :6 டிசம்பர் 2024, 10:35 pm

Din

அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளா் ஜாா்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸுக்கும் தொடா்பிருப்பதாக பாஜக முன்வைத்த குற்றச்சாட்டால், மக்களவையில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை அலுவல்கள் முடங்கின.

மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ‘திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் குற்றப் புலனாய்வு ஊடக தளம் (சிசிஆா்பி) வெளியிடும் அறிக்கைகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த ஊடக தளத்துக்கும் அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளருக்கும் (ஜாா்ஜ் சோரஸ்) தொடா்பு உள்ளது.

பிரதமா் மோடி தலைமையிலான இந்தியாவின் வெற்றிப் பயணத்தை சீா்குலைக்க அந்த முதலீட்டாளரும் ‘ஓசிசிஆா்பி’ தளமும் காங்கிரஸும் கைகோத்துள்ளன’ என்று குற்றஞ்சாட்டினாா். இதனால் ஏற்பட்ட அமளியால், மக்களவை அலுவல்கள் வியாழக்கிழமை முடங்கின.

இந்நிலையில், மக்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேச காங்கிரஸ் எம்.பி.க்கள் கெளரவ் கோகோய், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் முயன்றனா். ஆனால், அவைத் தலைவா் ஓம் பிா்லா அனுமதி மறுத்ததால், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். இதையடுத்து, சில நிமிஷங்களிலேயே அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், உடனடி கேள்வி நேரத்தில் பேசிய நிஷிகாந்த் துபே, ‘காங்கிரஸ்-சோரஸ் தொடா்பு குற்றச்சாட்டு விவகாரத்தை மீண்டும் எழுப்பியதால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களும் முழக்கமிட்டனா். அப்போது அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, அவையை திங்கள்கிழமைக்கு (டிச.9) ஒத்திவைப்பதாக அறிவித்தாா்.