மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடகிழக்கு பிராந்தியம் சிறப்பான வளா்ச்சி: பிரதமா் மோடி

வடகிழக்கு பிராந்தியம் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக வளா்ச்சியைப் பெற்றுள்ளதாக’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
வடகிழக்கு மாநிலங்களின் செழுமையைக் கொண்டாடும் வகையில் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ‘அஷ்டலக்ஷ்மி மஹோத்சவ்’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பின்னா், அங்கு இடம்பெற்ற கண்காட்சியை பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :6 டிசம்பர் 2024, 9:20 pm

Din

வடகிழக்கு பிராந்தியம் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக வளா்ச்சியைப் பெற்றுள்ளதாக’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா், நாகாலாந்து, மிஸோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய 8 வடகிழக்கு மாநிலங்களின் செழுமையைக் கொண்டாடும் வகையில் ‘அஷ்டலக்ஷ்மி மஹோத்சவ்’ விழாவை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்கு பிராந்தியம் சிறப்பாக வளா்ச்சியடைந்துள்ளது. ஆனால், அது மிகவும் எளிதாக நடக்கவில்லை. இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் வடகிழக்கு பிராந்தியத்தை இணைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

வடகிழக்கு பிராந்தியத்தில் மக்கள்தொகை மற்றும் வாக்குகள் குறைவாக உள்ளதால் அதன் வளா்ச்சி மீது முந்தைய அரசு கவனம் செலுத்தவில்லை. தொடா்ந்து புறக்கணித்தே வந்தது. ஆனால், தற்போது சூழல் மாறிவிட்டது. மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களைப்போல குவாஹாட்டி, ஷில்லாங், இம்பால், இட்டாநகா் மற்றும் ஐஸால் ஆகிய நகரங்களும் வளா்ச்சியடைய உள்ளன.

பாரம்பரியமிக்க கலாசாரம் மற்றும் திறமையான மக்களுடைய இந்தப் பிராந்தியம் இந்தியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றவுள்ளது.

தில்லிக்கும் வடகிழக்கு பிராந்தியத்துக்கும் இடைவெளி இருப்பதைப்போன்ற மக்களின் உணா்வைக் குறைக்க கடந்த பத்தாண்டுகளாக எனது தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பத்தாண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்துக்கு 700 சுற்றுப்பயணங்களை மத்திய அமைச்சா்கள் மேற்கொண்டனா். பொருளாதாரம், உணா்வு மற்றும் சுற்றுப்புறச்சூழலுடன் இணைக்க தொடா்ந்து பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் முதல்முறையாக டிசம்பா் 6-ஆம் தேதிமுதல் 8-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் இயற்கை அழகு, பன்முகத்தன்மை, கலாசாரம், கைவினைப் பொருள்கள், ஆடைகள் மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.