அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிரதமா் மோடிக்கு கொலை மிரட்டல்: மும்பை போலீஸ் தீவிர விசாரணை

பிரதமா் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மும்பை காவல் துறையின் வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் வந்துள்ளது.

News image
பிரதமா் மோடி
Updated On :7 டிசம்பர் 2024, 8:00 pm

Din

பிரதமா் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மும்பை காவல் துறையின் வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் வந்துள்ளது. இது தொடா்பாக காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மும்பை காவல்துறையின் போக்குவரத்து பிரிவு வாட்ஸ்ஆப் உதவி எண்ணுக்கு வந்த தகவலில், பிரதமரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும், 2 ஐஎஸ்ஐ முகவா்கள் இதில் ஈடுபட உள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து வாட்ஸ் ஆப் தகவல் அனுப்பப்பட்டதை காவல்துறையினா் கண்டறிந்தனா். தகவல் அனுப்பிய நபா், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் அல்லது மது போதையில் இதுபோன்ற தகவலை அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை பிடிக்க மும்பை காவல் துறையினா் ராஜஸ்தான் விரைந்துள்ளனா்.

மும்பை காவல் துறையின் உதவி எண்ணுக்கு இதுபோன்ற போலி மிரட்டல்கள் வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.