திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ம.பி.யில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டு

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :8 டிசம்பர் 2024, 3:56 pm IST

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், மொரீனா மாவட்டத்தில் மாநில காவல்துறையின் சிறப்பு ஆயுதப் படைகளின் ஆயுதக் கிடங்கு உள்ளது.

இங்கிருந்து 9எம்எம் கைத்துப்பாக்கிகளின் 200 தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் திருடப்பட்டதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்த திருட்டு சம்பவம் சனிக்கிழமை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து சிறப்பு ஆயுதப் படை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக கோட்வாலி காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பல் மண்டல சுஷாந்த் சக்சேனா அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

இதனிடையே ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கிகள் திருடப்படவில்லை என மொரீனா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால் தாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.