ம.பி.யில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டு
மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்.

கோப்புப்படம்.
மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், மொரீனா மாவட்டத்தில் மாநில காவல்துறையின் சிறப்பு ஆயுதப் படைகளின் ஆயுதக் கிடங்கு உள்ளது.
இங்கிருந்து 9எம்எம் கைத்துப்பாக்கிகளின் 200 தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் திருடப்பட்டதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த திருட்டு சம்பவம் சனிக்கிழமை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து சிறப்பு ஆயுதப் படை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக கோட்வாலி காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பல் மண்டல சுஷாந்த் சக்சேனா அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
இதனிடையே ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கிகள் திருடப்படவில்லை என மொரீனா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால் தாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...