மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் தங்கும் விடுதியின் மாடியில் இருந்து விழுந்த 2 மாணவர்கள் பலி

தில்லியில் தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து விழுந்த 2 மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :9 டிசம்பர் 2024, 9:19 am

DIN

தில்லியில் தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து விழுந்த 2 மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லி ரோகிணியில் உள்ள தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து இரண்டு மாணவர்கள் திங்கள்கிழமை பலியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பலியான மாணவர்கள் ராஜஸ்தானின் பரத்பூரில் வசிக்கும் இஷான் மற்றும் தில்லியின் பாலம் காலனியில் வசிக்கும் ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும இருவரும் தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பகவான் பரசுராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் பிபிஏ படித்து வந்தனர் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "அதிகாலை 1:10 மணியளவில் கேஎன்கே மார்க் காவல் நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து விட்டதாக அழைப்பு வந்தது.

காவல்துறை குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டது.

விசாரணையில், இரண்டு பேரும், தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் உள்ள அறையில் இருந்த ஜன்னல் வழியாக விழுந்து விட்டனர் என்று தெரிவித்தார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். முன்னதாக மாணவர்கள் நான்காவது மாடியில் இருந்து குதித்ததாக போலீஸார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.