இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது என சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்துவரும் நிலையில், சஞ்சய் ரெளத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் சஞ்சய் ரெளத் பேசியதாவது,
''எங்கள் கூட்டணியில் உள்ள சில கட்சியினருக்கு மாறுபட்ட கருத்துகள் உண்டு. திரிணமூல் காங்கிரஸோ, லாலு பிரசாத் யாதவோ, அகிலேஷ் யாதவோ யாராக இருந்தாலும் இந்தியா கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கூறலாம். நாம் அனைவரும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளோம். யாரேனும் கூட்டணி தொடர்பாக புதிதாக கூறினாலோ அல்லது கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விரும்பினாலோ, அதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும். அவர்கள் (காங்கிரஸ்) கருத்துகள் மூலம் இந்த விவகாரம் முன்னோக்கி நகரும்.
ராகுல் காந்தியின் தலைமையில் யாரும் குறை கூறவில்லை. யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவர் எங்கள் அனைவருக்குமான தலைவர்'' என சஞ்சய் ரெளத் குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் எனக் குறி வருகின்றனர்.
இதையும் படிக்க | மளிகைக் கடையில் ராகுல் காந்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: பி.ஆா்.பாண்டியன்
கா்நாடக முதல்வரை தமிழக முதல்வா் சந்திக்கும் முடிவு வரவேற்கத்தக்கது

உத்தவ் கட்சியில் பிளவு?: எம்.பி.க்கள் கட்சி மாறாமல் தடுக்க கொறடா உத்தரவு- ரூ.50 கோடி பேரம் என குற்றச்சாட்டு

மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம்: சஞ்சய் ரெளத் குற்றச்சாட்டு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



