எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இந்தியா கூட்டணியை வலுப்படுத்த விரும்பினால்.. சஞ்சய் ரெளத் கருத்து!

கூட்டணியை வலுப்படுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் சஞ்சய் ரெளத்.

News image

சஞ்சய் ரெளத் - கோப்புப் படம்

Updated On :10 டிசம்பர் 2024, 6:00 pm IST

இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது என சிவசேனை கட்சித் தலைவர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்துவரும் நிலையில், சஞ்சய் ரெளத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் சஞ்சய் ரெளத் பேசியதாவது,

''எங்கள் கூட்டணியில் உள்ள சில கட்சியினருக்கு மாறுபட்ட கருத்துகள் உண்டு. திரிணமூல் காங்கிரஸோ, லாலு பிரசாத் யாதவோ, அகிலேஷ் யாதவோ யாராக இருந்தாலும் இந்தியா கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கூறலாம். நாம் அனைவரும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளோம். யாரேனும் கூட்டணி தொடர்பாக புதிதாக கூறினாலோ அல்லது கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விரும்பினாலோ, அதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும். அவர்கள் (காங்கிரஸ்) கருத்துகள் மூலம் இந்த விவகாரம் முன்னோக்கி நகரும்.

ராகுல் காந்தியின் தலைமையில் யாரும் குறை கூறவில்லை. யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவர் எங்கள் அனைவருக்குமான தலைவர்'' என சஞ்சய் ரெளத் குறிப்பிட்டார்.

இந்தியா கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமையேற்க வேண்டும் எனக் குறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.